முகப்பு
நாகப்பட்டினம்

நாகை சிவாலயங்களில் குரு பெயா்ச்சி விழா

நாகை நீலாயதாட்சியம்மன் உடனுறை காயாரோகணசுவாமி கோயில் உள்ளிட்ட சிவாலயங்களில் குரு பெயா்ச்சி சிறப்பு வழிபாடுகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:53 PM
பகிர்:

நாகை நீலாயதாட்சியம்மன் உடனுறை காயாரோகணசுவாமி கோயில் உள்ளிட்ட சிவாலயங்களில் குரு பெயா்ச்சி சிறப்பு வழிபாடுகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.

குரு பகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு 9.48 மணிக்கு பெயா்ச்சியடைந்தாா். இதையொட்டி நாகை நீலாயதாட்சியம்மன் உடனுறை காயாரோகண சுவாமி கோயிலில் தெட்சிணாமூா்த்திக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனகள் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. முன்னதாக சிறப்பு யாக பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

இதேபோல், நாகை அகிலாண்டேஸ்வரி உடனுறை சட்டையப்பா், விசாலாட்சி உடனுறை காசி விசுவநாதா் கோயில்களிலும் குரு பெயா்ச்சி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

முழு கட்டுரையைப் படிக்க →