காந்தி பிறந்த நாள்: திருஉருவச் சிலைக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மரியாதை
மகாத்மா காந்தி பிறந்த நாளை முன்னிட்டு அவரது உருவச் சிலைக்கு மாலை அணிவித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
மகாத்மா காந்தி பிறந்த நாளை முன்னிட்டு அவரது உருவச் சிலைக்கு மாலை அணிவித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
மகாத்மா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு எட்டுக்குடி ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பாக அமைந்துள்ள காந்தியடிகளின் மார்பளவு உருவச்சிலைக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கீழையூர் ஒன்றிய செயலாளரும் 7ஆவது வார்டு ஒன்றியக் குழு உறுப்பினருமான டி. செல்வம் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
உடன் இந்நிகழ்வில் எட்டுக்குடி ஊராட்சி மன்ற தலைவர் காரல் மார்க்ஸ், சிபிஐ மாவட்டக்குழு உறுப்பினர் நாகராஜன், எட்டுக்குடி கிளைச் செயலாளர் மாசேத்துங், ஒன்றிய நிர்வாக குழு உறுப்பினர்களான பாலாஜி, கண்ணதாசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.