நாகை துறைமுகத்தில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்
மேற்கு மத்திய வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக, நாகை துறைமுக அலுவலகத்தில் 1ஆம் எண் தூர புயல் எச்சரிக்கைக் கூண்டு ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ஏற்றப்பட்டது.
மேற்கு மத்திய வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக, நாகை துறைமுக அலுவலகத்தில் 1ஆம் எண் தூர புயல் எச்சரிக்கைக் கூண்டு ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ஏற்றப்பட்டது.
மேற்கு மத்திய வங்கக் கடலில் ஒரு காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. இந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் ஆந்திரம் மாநிலம், விசாகப்பட்டினத்துக்கும் தென்கிழக்கில் சுமார் 430 கிலோமீட்டர் தொலைவிலும், நர்சாபூரிலிருந்து 520 கிலோமீட்டர் கிழக்கு தென்கிழக்கிலும் நிலைகொண்டுள்ளது.
இந்தக் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகக் மாறி, மேற்கு - வட மேற்கு திசை நோக்கி நகர்ந்து வடக்கு ஆந்திர கடற்கரையையொட்டிய நர்சாபூர் - விசாகப்பட்டினம் இடையே அக். 12-ஆம் தேதி இரவு கரையைக் கடக்க வாய்ப்புள்ளது.
இதையொட்டி, நாகை துறைமுக அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.45 மணிக்கு தொலைதூர 1-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு கொடி ஏற்றப்பட்டது.