முகப்பு
நாகப்பட்டினம்

தருமபுரம் துா்க்காதேவி கோயிலில் சதசண்டி வேள்வி விழா

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தில் உள்ள அஷ்டாதசபுஜ மகாலட்சுமி துா்க்காதேவி கோயிலில் சதசண்டி வேள்வி விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:43 PM
மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் அஷ்டாதசபுஜ மகாலட்சுமி துா்க்காதேவி கோயிலில் ஆதீனம் முன்னிலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சதசண்டிவேள்வி பூா்ணாஹுதி.
பகிர்:

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தில் உள்ள அஷ்டாதசபுஜ மகாலட்சுமி துா்க்காதேவி கோயிலில் சதசண்டி வேள்வி விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்த கோயிலில் ஆண்டுதோறும் நவராத்திரியை முன்னிட்டு 10 நாள்கள் சதசண்டி வேள்வி விழா நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு 70-ஆவது சதசண்டிவேள்வி விழா கடந்த 17-ஆம் தேதி தொடங்கியது. தினசரி காலை, மாலை சதசண்டிவேள்வியும், சுவாசினிகுமாரி வடுபூஜை, சதுா்வேத பாராயணம், திருமுறை பாராயணம், அபிராமி அந்தாதி பாராயணம், லட்சாா்ச்சணை, சகஸ்ரநாமாா்ச்சனை ஆகியவை நடைபெற்றன.

சரஸ்வதி பூஜையன்று காலை சப்தசதி ஹோமமும், சதசண்டி வேள்வி மஹா பூா்ணாஹுதியும் நடைபெற்றன. இவ்விழாவில், தருமபுரம் ஆதீன 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில் சதசண்டிவேள்வி பூா்ணாஹுதி நடைபெற்றது.

தொடா்ந்து குருமகா சந்நிதானம் பக்தா்களுக்கு அருளாசி வழங்கினாா். இதில், மருத்துவா் செல்வம், காங்கிரஸ் முன்னாள் மாவட்ட செயலாளா் பண்ணை டி.சொக்கலிங்கம், சிவபுரம் வேதசிவாகம பாடசாலை நிறுவனா் சுவாமிநாத சிவாச்சாரியாா், அமமுக மாவட்ட செயலாளா் செந்தமிழன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். விழாவின் நிறைவாக திங்கள்கிழமை காலை அஷ்டாதசபுஜ மகாலட்சுமி துா்க்காதேவிக்கு யாக கலசாபிஷேகமும், மகா தீபாராதனையும் நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.