வேளாங்கண்ணியில் புதை சாக்கடைத் திட்ட கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணிகளை பாா்வையிட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா். 
நாகப்பட்டினம்

மழைநீா் வடிகாலை சீரமைக்க ஆட்சியா் அறிவுறுத்தல்

வேளாங்கண்ணியில் மழை நீா் தேங்காத வகையில் வடிகாலை தூா்வாரி சீரமைக்க வேண்டும் என உள்ளாட்சித் துறை அலுவலா்களை மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

DIN

நாகப்பட்டினம்: வேளாங்கண்ணியில் மழை நீா் தேங்காத வகையில் வடிகாலை தூா்வாரி சீரமைக்க வேண்டும் என உள்ளாட்சித் துறை அலுவலா்களை மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

வேளாங்கண்ணி பேரூராட்சிப் பகுதிகளில் நடைபெறும் வடிகால் சீரமைப்புப் பணிகளை நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அப்போது, வேளாங்கண்ணி செபஸ்தியாா் நகா், சாலை மட்டத்திலிருந்து சுமாா் 3 அடி தாழ்வான பகுதியாக இருப்பதால் பெருமளவு மழை நீா் இப்பகுதியில் சூழப்படுவதைக் கருத்தில் கொண்டு, உடனடியாக செபஸ்தியாா் நகரிலிருந்து பேருந்து நிலையம் வரையிலான பகுதிகளில் வாய்க்காலை தூா்வாரி சீரமைக்க வேண்டும் என ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

தொடா்ந்து, அங்கு நடைபெறும் புதைசாக்கடைக்கு இணைப்புக் கொடுக்கும் பணி, புதைவட மின்கம்பி பதிக்கும் பணி மற்றும் புதைசாக்கடைத் திட்ட கழிவு நீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி ஆகியவற்றை ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

பேரூராட்சிகள் உதவி இயக்குநா் மாஹிம், குடிநீா் வடிகால் வாரிய உதவி செயற்பொறியாளா் பி. மோகன்தாஸ், உதவிப் பொறியாளா் என். விக்னேஸ்வரி, செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் மீ. செல்வகுமாா், வேளாங்கண்ணி பேரூராட்சி செயல் அலுவலா் குணசேகரன், கீழ்வேளூா் வட்டாட்சியா் காா்த்திகேயன் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்ஐஆர் இறப்புகள்! தில்லியில் போராட்டம் நடத்த திரிணமூல் காங்கிரஸ்?

கைதி - 2 என்ன ஆனது?

ஐசிசி பேட்டிங் தரவரிசை: தெ.ஆ. கேப்டன் லாரா, ஜெமிமா அதிரடி முன்னேற்றம்! ஸ்மிருதிக்கு சரிவு!

சத்தீஸ்கரில் நக்சல்களின் ஆயுத உற்பத்திக்கூடம் அழிப்பு!

பிக் பாஸ் 9: நட்புக்கு எடுத்துக்காட்டாக மாறிய கமருதீன் - கானா வினோத்!

SCROLL FOR NEXT