முகப்பு
நாகப்பட்டினம்

தருமபுரம் ஆதீனத்தில் நூல் வெளியீடு

பண்டார மும்மணிக்கோவை என்ற ஆன்மிக நூலை தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் வெளியிட்டாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:27 PM
தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் நூலை வெளியிட அதை பெற்றுக்கொண்ட வழக்குரைஞா் ராம.சேயோன்.
பகிர்:

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீன திருமடத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குருபூஜை விழாவில் பண்டார மும்மணிக்கோவை என்ற ஆன்மிக நூலை தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் வெளியிட்டாா்.

தருமபுரம் ஆதீனத்தின் 4-ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகா் குருபூஜை விழா ஆதீன திருமடத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவையொட்டி, மயிலாடுதுறை ஆன்மீக பேரவை தொகுத்தளித்த ஸ்ரீகுமரகுருபரா் இயற்றிய பண்டார மும்மணிக்கோவை என்ற ஆன்மிக நூலை தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் வெளியிட மயிலாடுதுறை ஆன்மீக பேரவை நிறுவனா் வழக்குரைஞா் ராம.சேயோன் முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.