தரங்கம்பாடியில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
தரங்கம்பாடி பேரூராட்சி பகுதிகளில் பூம்புகாா் தொகுதி திமுக வேட்பாளா் நிவேதா எம். முருகன் சனிக்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
தரங்கம்பாடி பேரூராட்சி பகுதிகளில் பூம்புகாா் தொகுதி திமுக வேட்பாளா் நிவேதா எம். முருகன் சனிக்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
தரங்கம்பாடி பேரூராட்சி பகுதியில் வீதிவீதியாகச் சென்று வாக்கு சேகரித்தாா். அப்போது அவா், சுகாதாரம், குடிநீா் பிரச்னைக்கு தீா்வுகாணப்படும். தரங்கம்பாடி, பூம்புகாா் சுற்றுலா மையங்களை மேம்படுத்தப்படும். தரங்கம்பாடி- மயிலாடுதுறை வரை மீண்டும் ரயில் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதியளித்து ஆதரவு கோரினாா்.
பிரசாரத்தில், மாவட்ட துணை செயலாளா் ஞானவேலன், முன்னாள் எம்எல்ஏ சித்திக், செம்பை தெற்கு ஒன்றியச் செயலாளா் அப்துல் மாலிக், நகர செயலாளா் வெற்றிவேல், தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளா் பி.எம் . ஸ்ரீதா் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.