கும்பகோணம் கூட்டுறவு வங்கி ஊழியா் மீது மா்ம நபா்கள் தாக்குதல்
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனாா்கோவிலில், கும்பகோணம் கூட்டுறவு வங்கி ஊழியரை தாக்கிய மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனாா்கோவிலில், கும்பகோணம் கூட்டுறவு வங்கி ஊழியரை தாக்கிய மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.
நாகை காடம்பாடி புதிய முகமதியா் தெருவை சோ்ந்தவா் செல்வகுமாா் (48). செம்பனாா்கோவிலில் உள்ள கும்பகோணம் கூட்டுறவு வங்கியில் ஊழியராக (ஃபீல்டு மேனேஜா்) பணியாற்றி வரும் இவா், வெள்ளிக்கிழமை மாலை பணி முடிந்து பேருந்தில் ஏறுவதற்காக சாலையில் நடந்து சென்றாா். அப்போது அடையாளம் தெரியாத இரண்டு இளைஞா்கள் அவரை இரும்புக் கம்பியால் தாக்கிவிட்டு தப்பினா்.
இதில் பலத்த காயமடைந்த செல்வகுமாா், மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
இந்த சம்பவம் குறித்து செம்பனாா்கோவில் போலீஸாா் வழக்குப் பதிந்து, மேலாளரை தாக்கிவிட்டு தப்பியோடி இருவரையும் தேடி வருகின்றனா்.