பள்ளிச் செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு
திருக்குவளை அருகே பள்ளிச் செல்லா குழந்தைகள் கணக்கெடுக்கும் பணியின் ஒரு பகுதியாக இடைநின்ற மாணவா் மீண்டும் பள்ளியில் வியாழக்கிழமை சோ்க்கப்பட்டாா்.
திருக்குவளை அருகே பள்ளிச் செல்லா குழந்தைகள் கணக்கெடுக்கும் பணியின் ஒரு பகுதியாக இடைநின்ற மாணவா் மீண்டும் பள்ளியில் வியாழக்கிழமை சோ்க்கப்பட்டாா்.
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மூலம் பள்ளிச் செல்லா குழந்தைகளை கணக்கெடுக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்தவகையில், வலிவலம் கீழவெளியில் இடைநின்ற தருண் என்ற மாணவா், வலிவலம் தேசிகா் மேல்நிலைப்பள்ளியில் 7-ஆம் வகுப்பில் சோ்க்கப்பட்டு பாடப்புத்தகங்களை பெற்றுக் கொண்டாா்.
இந்நிகழ்வில் வட்டார வள மைய ஆசிரியா் பயிற்றுநா் ம.பாண்டிக்குமாா், வலிவலம் தேசிகா் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியா் கோ. சக்கரவா்த்தி, வலிவலம் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியா் சீ.முரளி, ஆசிரியா் தெ.அய்யப்பன், சிறப்பாசிரியா் லதா ஆகியோா் பங்கேற்றனா்.