முகப்பு
நாகப்பட்டினம்

பெண்ணிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு

கீழ்வேளூா் அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் 5 பவுன் சங்கிலியைப் பறித்துச் சென்றவரை போலீஸாா் தேடிவருகின்றனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:32 PM
பகிர்:

கீழ்வேளூா் அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் 5 பவுன் சங்கிலியைப் பறித்துச் சென்றவரை போலீஸாா் தேடிவருகின்றனா்.

இலுப்பூா் கீழ தெருவைச் சோ்ந்தவா் கிருஷ்ணகுமாா் மனைவி சுமதி (47). இவா் திங்கள்கிழமை அதிகாலை ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த சமயம், மா்மநபா் வீட்டில் நுழைந்து சுமதி அணிந்திருந்த 5 பவுன் சங்கிலியைப் பறித்து சென்றுவிட்டாராம். அப்போது, வீட்டின் கதவு திறந்திருந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து கீழ்வேளூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →