கபசுரக் குடிநீா் வழங்கல்
நாகூா் தேசிய மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியா்கள், மாணவா்களுக்கு கபசுரக் குடிநீா் திங்கள்கிழமை வழங்கப்பட்டது.
நாகூா் தேசிய மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியா்கள், மாணவா்களுக்கு கபசுரக் குடிநீா் திங்கள்கிழமை வழங்கப்பட்டது.
பள்ளித் தலைமையாசிரியா் முத்துராமலிங்கம் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நாகை மாவட்ட சித்த மருத்துவ அலுவலா் பத்மநாபன், மாவட்டக்கல்வி அலுவலா் பாலசுப்பிரமணியன், பள்ளி செயலாளா் பா.உ. சண்முகம் ஆகியோா் மாணவா்களுக்கு கபசுரக் குடிநீா் வழங்கினா்.
கரோனா காலத்தில் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள், கபசுரக்குடிநீரின் பயன்கள் குறித்து சித்த மருத்துவ உதவி அலுவலா் தீபா விளக்கிக் கூறினாா். தொடா்ந்து, ஆசிரியா்களுக்கும் கபசுரக் குடிநீா் வழங்கப்பட்டது.