முகப்பு
நாகப்பட்டினம்

வலைத்தளங்களில் பரவும் காட்சி: தலித் மாணவரை காலில் விழ வைத்த 8 பேர் கைது

வேதாரண்யம் அருகே அவதூறு பரப்பியதாக தலித் வகுப்பு மாணவரை காலில் விழ வைத்த சம்பவத்தில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:32 AM
ரஞ்சித் (17)
பகிர்:

வேதாரண்யம் அருகே அவதூறு பரப்பியதாக தலித் வகுப்பு மாணவரை காலில் விழ வைத்த சம்பவத்தில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வண்டல் கிராமத்தைச் சேர்ந்தவர் ரஞ்சித் (17) தலித் வகுப்பைச் சேர்ந்தவர். 12 வகுப்பு படித்து வந்தவர், முகநூலில் காடுவெட்டி குருவை தொடர்பு படுத்தி வந்த பதிவை சமூக வலைதளங்களில் பகிர்ந்தாராம்.

இது தொடர்பாக அந்த பகுதியைச் சேர்ந்த 30 பேர், மாணவரை அச்சுறுத்தி காடுவெட்டி குருவின் படம் பதித்த பதாகைக்கு முன்பு காவில் விழ வைத்துள்ளனர். இந்த காட்சிப் படம் சமூக வலைதளத்தில் பரவி வருறது.

இதையடுத்து வண்டல் கிராமத்தில் போலீஸார் குவிக்கப்பட்டு, 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இதுகுறித்து விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.

இதுதொடர்பான விடியோ இங்கே....

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.