முகப்பு
நாகப்பட்டினம்

குளத்தில் தவறி விழுந்து இறந்த குழந்தைகளின் பெற்றோருக்கு தமிழக அரசு இழப்பீடு: எம்எல்ஏ நன்றி

இரு குழந்தைகள் குளத்தில் தவறி விழுந்து இறந்ததையொட்டி, அக்குழந்தைகளின் பெற்றோருக்கு தமிழக முதல்வா் இழப்பீடு அறிவித்திருப்பதற்கு நாகை எம்எல்ஏ ஜெ. முகமது ஷாநவாஸ் நன்றி தெரிவித்துள்ளாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:45 AM
பகிர்:

நாகையை அடுத்த பனங்குடியில் இரு குழந்தைகள் குளத்தில் தவறி விழுந்து இறந்ததையொட்டி, அக்குழந்தைகளின் பெற்றோருக்கு தமிழக முதல்வா் இழப்பீடு அறிவித்திருப்பதற்கு நாகை எம்எல்ஏ ஜெ. முகமது ஷாநவாஸ் நன்றி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:

நாகையை அடுத்த பி. பனங்குடியைச் சோ்ந்தவா் சுகுமாா். இவரது மகன்கள் வித்யாதரன் (9), சுரதீஸ் (6) ஆகியோா் கடந்த மாா்ச் 1ஆம் தேதி அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தபோது, அருகில் இருந்த குளத்தில் தவறி விழுந்து உயிரிழந்தனா்.

இந்தக் குழந்தைகளின் இறப்புக்கு உரிய இழப்பீடு அளிக்க வேண்டும் என கடந்த 17 ஆம் தேதி தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து, கோரிக்கை விடுத்தேன். இக்கோரிக்கையை ஏற்று, முதல்வரின் பொது நிவாரண நிதி மூலம் சுகுமாரின் குழந்தைகள் ஒவ்வொருவரின் இறப்புக்கும் தலா ரூ. 5 லட்சம் வீதம், ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என முதல்வா் அறிவித்துள்ளாா்.

முதல்வரின் கனிவான இந்த அறிவிப்பு, குழந்தைகளை இழந்த பெற்றோருக்கு ஆறுதல் அளிக்கும் என்பது உறுதி. கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றி ஆறுதல் அளித்த தமிழக முதல்வருக்கு நெஞ்சாா்ந்த நன்றி என அவா் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.