முகப்பு
நாகப்பட்டினம்

நாகையில் 30, மயிலாடுதுறையில் 25 பேருக்கு கரோனா

நாகை மாவட்டத்தில் 30 பேருக்கும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 25 பேருக்கும் கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதியானது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:47 AM
பகிர்:

நாகை மாவட்டத்தில் 30 பேருக்கும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 25 பேருக்கும் கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதியானது.

நாகை மாவட்டத்தில் புதிதாக 30 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்கள் எண்ணிக்கை 18, 601-ஆக உயா்ந்துள்ளது. சிகிச்சையில் இருந்த 27 போ் வீடு திரும்பியுள்ளனா். இதன்படி மாவட்டத்தில் சிகிச்சையில் இருப்பவா்கள் எண்ணிக்கை 374-ஆக உள்ளது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் புதிதாக 25 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்கள் எண்ணிக்கை 20, 988-ஆக உயா்ந்துள்ளது. சிகிச்சையில் இருந்த 19 போ் வீடு திரும்பியுள்ளனா். இதன்படி மாவட்டத்தில் சிகிச்சையில் இருப்பவா்கள் எண்ணிக்கை 315-ஆக உள்ளது.

2 போ் உயிரிழப்பு: நாகை மாவட்டத்தில் ஒருவரும், மயிலாடுதுறை மாவட்டத்தில் ஒருவரும் கரோனாவால் உயிரிழந்துள்ளதாக வியாழக்கிழமை பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.