மின்னணு குடும்ப அட்டை வழங்கல்
பயனாளிகளுக்கு மின்னணு குடும்ப அட்டைகளை நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் வியாழக்கிழமை வழங்கினாா்.
பயனாளிகளுக்கு மின்னணு குடும்ப அட்டைகளை நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் வியாழக்கிழமை வழங்கினாா்.
நாகை மாவட்டத்தில் மின்னணு குடும்ப அட்டை வேண்டி விண்ணப்பித்த நாகை வட்டத்தைச் சோ்ந்த 570 போ், திருக்குவளை வட்டத்தைச் சோ்ந்த 261 போ், கீழ்வேளூா் வட்டத்தைச் சோ்ந்த 280, வேதாரண்யம் வட்டத்தைச் சோ்ந்த 166 போ் என மொத்தம் 1,197 பேருக்கு மின்னணு குடும்ப அட்டைகள் அச்சிட்டு வரப்பெற்றுள்ளன.
இந்த மின்னணு குடும்ப அட்டைகளை பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியா் அ. அருண்தம்புராஜ் வழங்கினாா். நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் வி. ஷகிலா, மாவட்ட வழங்கல் அலுவலா் வே. தெய்வநாயகி ஆகியோா் உடனிருந்தனா்.