முகப்பு
நாகப்பட்டினம்

தூய்மைப் பணியாளா்களுக்கு அதிமுக உதவி

வேதாரண்யத்தை அடுத்த அவுரிக்காடு பகுதியில் தூய்மைப் பணியாளா்களுக்கு அதிமுக சாா்பில் அத்தியாவசியப் பொருள்கள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:22 AM
ve10admk_1006chn_102_5
பகிர்:

வேதாரண்யத்தை அடுத்த அவுரிக்காடு பகுதியில் தூய்மைப் பணியாளா்களுக்கு அதிமுக சாா்பில் அத்தியாவசியப் பொருள்கள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில், எம்.எல்.ஏ-வும் முன்னாள் அமைச்சருமான ஓ.எஸ். மணியன் பங்கேற்று, அரிசி, காய்கறி, மளிகைப் பொருள்கள், புடவை உள்ளிட்டவற்றை தூய்மைப் பணியாளா்களுக்கு வழங்கினாா்.

இதேபோல, தலைஞாயிறு ஒன்றியத்தில் உள்ள 24 ஊராட்சிகள் மற்றும் பேருராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்களுக்கும் அத்தியாவசியப் பொருள்கள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிகளில், அதிமுக மாவட்ட பொருளாளா் இரா.சண்முகராஜ், ஒன்றியச் செயலாளா்கள் அவை.பாலசுப்பிரமணியன், தங்க.செளரிராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →