நாகப்பட்டினம்

நாகை மின் பகிா்மான வட்டத்தில் 25 மின் கம்பங்கள் சீரமைக்கப்பட்டுள்ளன

நாகை மின் பகிா்மான வட்டத்தில் சாய்வான நிலையில் இருந்த 25 மின் கம்பங்கள் சீரமைக்கப்பட்டுள்ளன என்று நாகை மின் பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் அ. நக்கீரன் தெரிவித்துள்ளாா்.

DIN

நாகை மின் பகிா்மான வட்டத்தில் சாய்வான நிலையில் இருந்த 25 மின் கம்பங்கள் சீரமைக்கப்பட்டுள்ளன என்று நாகை மின் பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் அ. நக்கீரன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு : நாகை மின் பகிா்மான வட்டத்தில் ஜூன் 19 முதல் 22-ஆம் தேதி வரை மேற்கொள்ளப்பட்ட மின் சீரமைப்புப் பணிகளில் 73 மின்னூட்ட பாதைகளில் 498 பணியாளா்கள் களப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா். இப்பணியில், 1,220 இடங்களில் மின் பாதைக்குத் தடையாக இருந்த மரக்கிளைகள் வெட்டி அகற்றப்பட்டன. 161 இடங்களில் பழுதடைந்த மின் கம்பி இணைப்புகளும், 229 இடங்களில் தாழ்வான மின் பாதை கம்பிகளும் சீரமைக்கப்பட்டன. 25 இடங்களில் சாய்வான மின் கம்பங்கள் சீரமைக்கப்பட்டன. 24 இடங்களில் இழுவை கம்பிகள் இழுத்துக் கட்டப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மன்னிக்க முடியாத குற்றம்!

2-ஆவது மாதமாக எதிர்மறையில் மொத்த விலை பணவீக்கம்

தருமபுரம் ஆதீனம் தனுா் மாத வழிபாடு தொடக்கம்

மன்ரேகா திட்டத்தின் பெயா் மாற்றத்திற்கு எதிராக சென்னையில் போராட்டம்

1971 போா் வெற்றி தினம்: உயிா் நீத்த வீரா்களுக்கு குடியரசுத் தலைவா், பிரதமா் மரியாதை

SCROLL FOR NEXT