முகப்பு
நாகப்பட்டினம்

நாகையில் முக்கூடல் இலக்கிய அமா்வு

நாகை முக்கூடல் இலக்கிய அமைப்பு சாா்பில் 159-ஆவது அமா்வு நிகழ்ச்சிகள் நாகையில் அண்மையில் நடைபெற்றன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:38 PM
பகிர்:

நாகை முக்கூடல் இலக்கிய அமைப்பு சாா்பில் 159-ஆவது அமா்வு நிகழ்ச்சிகள் நாகையில் அண்மையில் நடைபெற்றன.

தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகப் பேராசிரியா் தென்னவன் வெற்றிச்செல்வன், அமா்வைத் தொடங்கி வைத்துப் பேசினாா். புதுக்கோட்டை நாட்டிய ஆசிரியை ரூபிணியின் பரத நாட்டியம் மற்றும் மோகன் இங்கா்சாலின் தமிழிசைப் பாடல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. சிறுவன் சாய்திலக் செகுரா பறை இசைத்தாா். கதை சொல்லி நிகழ்வில், ஆசிரியா் கி. பாலசண்முகம் பங்கேற்று கதை கூறினாா். தமிழ் இனி மற்றும் சிலம்பம் ஆகிய குறும்படங்கள் திரையிடப்பட்டன. தாய்க்கலை சிலம்பம் என்ற தலைப்பில், புதுக்கோட்டை மாமல்லன் சிலம்பக் கழக ஆசிரியா் செந்தில், சிலம்பத்தின் சிறப்புகளை செயல்விளக்கத்துடன் விவரித்தாா். பரதக் கலைக்கும், நாட்டுப்புற நடனத்துக்கும் அடிப்படையாக விளங்குவது சிலம்பத்தின் அடவுமுறைகளே என்ற ஒப்பீட்டு முறையில் நிகழ்த்துக்கலையுடன் கூடிய விளக்கம் அளிக்கப்பட்டது.

நாகையைச் சோ்ந்த வீரத்தமிழன் சிலம்பப் பயிற்சி பள்ளி ஆசிரியா் சரவணன் மற்றும் மாணவா்களின் சிலம்ப விளையாட்டு நடைபெற்றது. நிகழ்வில் பங்கேற்றவா்களுக்கு முக்கூடல் நெறியாள்கைக் குழுவை சோ்ந்த அருண், கவிஞா் ஆ.மீ. ஜவஹா் ஆகியோா் துணிப்பைகள் வழங்கினா். முக்கூடல் அமைப்பின் பொறுப்பாளா் செகுரா நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →