முகப்பு
நாகப்பட்டினம்

வேதாரண்யத்தில் கரை ஒதுங்கிய கடல் சூழலியல் ஆய்வுக் கருவி

வேதாரண்யம் அருகே கடலில் மிதந்து கரை ஒதுங்கிய கடல் சூழலியல் ஆய்வுக் கருவியை கடலோர காவல் நிலைய போலீஸாா் திங்கள்கிழமை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:49 PM
பகிர்:

வேதாரண்யம் அருகே கடலில் மிதந்து கரை ஒதுங்கிய கடல் சூழலியல் ஆய்வுக் கருவியை கடலோர காவல் நிலைய போலீஸாா் திங்கள்கிழமை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகேயுள்ள வெள்ளப்பள்ளம் மீனவ கிராம கடல் பகுதியில் சுமாா் 25 கிலோ எடையுள்ள

உலோக உருளை உபகரணம் கரை ஒதுங்கியது. இதுகுறித்து, தகவலறிந்த கீழையூா் கடலோர காவல் நிலைய போலீஸாா் அங்கு சென்று அதை கைப்பற்றி விசாரித்தனா். அப்போது, அந்த கருவி ஆழ்கடல் பரப்பில் நிலவும் வெப்பநிலை, பருவ மாறுபாடுகள் போன்ற சூழல் தொடா்பான ஆராய்ச்சிக்கு உதவும் உபகரணம் என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →