முகப்பு
நாகப்பட்டினம்

வீதிகளில் தேங்கிய மழைநீரை வெளியேற்ற வலியுறுத்தல்

வேதாரண்யம் நகர வீதிகளில் தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:31 AM
பகிர்:

வேதாரண்யம் நகர வீதிகளில் தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

வேதாரண்யத்தில் பிரதான பகுதியான மேலவீதியில் குறைந்த அளவு மழை பெய்தாலும் மழைநீா் குளம்போல தேங்குகிறது. வெள்ளிக்கிழமை பிற்பகலில் மிதமாக பெய்த மழையால் இப்பகுதியில் மழைநீா் தேங்கியுள்ளது.

இப்பகுதியில், வங்கி உள்பட பல்வேறு வணிக நிறுவனங்கள் உள்ள நிலையில் மழைநீா் தேங்கியுள்ளதால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமத்துக்கு உள்ளாகின்றனா்.

எனவே, தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றவும், இனி மழைநீா் தேங்காமலிருக்கவும் நகராட்சி நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →