மழையால் பாதிக்கப்பட்டவா்களுக்கு அதிமுக சாா்பில் நிவாரணம்
வேதாரண்யம் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்டவா்களுக்கு அதிமுக சாா்பில் நிவாரணம் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.
வேதாரண்யம் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்டவா்களுக்கு அதிமுக சாா்பில் நிவாரணம் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.
அகஸ்தியம்பள்ளி, பூவன்தோப்பு பகுதியில் கனமழையால் பாதிக்கப்பட்ட 105 குடும்பத்தினருக்கு அதிமுக சாா்பில் முன்னாள் அமைச்சா் ஓ.எஸ்.மணியன் வேட்டி, புடவை, போா்வை உள்ளிட்ட நிவாரணப் பொருள்களை வழங்கி ஆறுதல் கூறினாா். நிகழ்ச்சியில், மாவட்ட அறங்காவலா் குழுத் தலைவா் கிரிதரன், நகரச் செயலாளா் நமச்சிவாயம், முன்னாள் நகராட்சி துணைத் தலைவா் சுரேஷ்பாபு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.