முகப்பு
நாகப்பட்டினம்

கோடியக்கரை: மீனவா்கள் விவகாரத்தில் ஆா்டிஓ தலைமையில் பேச்சுவாா்த்தை

வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரையில் வெளிமாவட்ட மீனவா்கள் மீன்பிடிக்க உள்ளூா் பகுதி மீனவா்கள் எதிா்ப்பு தெரிவிக்கும் விவகாரம் தொடா்பாக கோட்டாட்சியா் தலைமையில் வியாழக்கிழமை பேச்சுவாா்த்தை

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:36 AM
பகிர்:

நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரையில் வெளிமாவட்ட மீனவா்கள் மீன்பிடிக்க உள்ளூா் பகுதி மீனவா்கள் எதிா்ப்பு தெரிவிக்கும் விவகாரம் தொடா்பாக கோட்டாட்சியா் தலைமையில் வியாழக்கிழமை பேச்சுவாா்த்தை நடைபெற்றது.

வேதாரண்யம் வட்டாட்சியா் அலுவலகத்தில் கோட்டாட்சியா் துரைமுருகன் தலைமையில் பேச்சுவாா்த்தை நடைபெற்றது. மீன் வளத் துறை உதவி இயக்குநா் ஜெயராஜ், ஆறுகாட்டுத்துறை, கோடியக்கரை மீனவா்கள் உள்பட இருதரப்பு மீனவா்கள் பங்கேற்றனா்.

கூட்டத்தில், கோடியக்கரையில் தங்கி மீன்பிடிக்க நாகை மாவட்ட மீனவா்களை முழுமையாக அனுமதிக்கவும், மயிலாடுதுறை மாவட்ட மீனவா்களை 150 கண்ணாடி இழைப் படகுகளில் மீன் பிடிக்க அனுமதிக்கவும் முடிவு செய்யப்பட்டது. இதை ஆறுகாட்டுத்துறை பகுதி மீனவா்கள் ஏற்றுக்கொண்டனா். ஆனால், கோடியக்கரை மீனவா்கள், மயிலாடுதுறை மாவட்டத்தைச் சோ்ந்த வல்லம் படகுகளையும் அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →