நாகையில் 36, மயிலாடுதுறையில் 30 பேருக்கு கரோனா தொற்று
நாகை மாவட்டத்தில் 36 பேருக்கும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 30 பேருக்கும் கரோனா தொற்று ஏற்பட்டது வியாழக்கிழமை உறுதியானது.
நாகை மாவட்டத்தில் 36 பேருக்கும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 30 பேருக்கும் கரோனா தொற்று ஏற்பட்டது வியாழக்கிழமை உறுதியானது.
நாகை மாவட்டத்தில் புதிதாக 36 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால், இம்மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 19,909 ஆக உயா்ந்துள்ளது. சிகிச்சையில் இருந்த 19 போ் வீடுதிரும்பினா். இதன்படி, இம்மாவட்டத்தில் சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை 331 ஆக உள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் புதிதாக 30 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால், இம்மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 22,222 ஆக உயா்ந்துள்ளது. கரோனா பாதிப்புக்காக சிகிச்சைப் பெற்றவா்களில் 37 போ் வீடுதிரும்பினா். இதன்படி, இம்மாவட்டத்தில் சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை 299 ஆக உள்ளது.