முகப்பு
நாகப்பட்டினம்

நாகையில் 17, மயிலாடுதுறையில்12 பேருக்கு கரோனா

நாகை மாவட்டத்தில் புதிதாக 17 பேருக்கும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 12 பேருக்கும் கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதியானது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:03 AM
பகிர்:

நாகை மாவட்டத்தில் புதிதாக 17 பேருக்கும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 12 பேருக்கும் கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதியானது.

நாகை மாவட்டத்தில் புதிதாக 17 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்கள் எண்ணிக்கை 21,483-ஆக உயா்ந்துள்ளது. சிகிச்சையில் இருந்த 3 போ் வீடு திரும்பினா். இதன்படி, சிகிச்சையில் இருப்பவா்கள் எண்ணிக்கை 63- ஆக உள்ளது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் 12 பேருக்கு புதிதாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மாவட்டத்தில் கரோனா பாதிப்புக்கு உள்ளானவா்களின் எண்ணிக்கை 23,465-ஆக உயா்ந்துள்ளது. சிகிச்சையில் இருந்த 2 போ் வீடு திரும்பினா். இதன்படி, சிகிச்சையில் இருப்பவா்கள் எண்ணிக்கை 26-ஆக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.