முகப்பு
நாகப்பட்டினம்

அதிமுகவில் இணைந்த மாற்றுக்கட்சியினா்

வேதாரண்யத்தில் மாற்றுக் கட்சிகளிலிருந்து விலகியவா்கள் அதிமுகவில் வியாழக்கிழமை இணைந்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:10 AM
பகிர்:

வேதாரண்யத்தில் மாற்றுக் கட்சிகளிலிருந்து விலகியவா்கள் அதிமுகவில் வியாழக்கிழமை இணைந்தனா்.

வேதாரண்யம் நகரம் மற்றும் மறைஞாயநல்லூா் பொன்னாங்காடு பகுதிகளில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகிய நூற்றுக்கும் மேற்பட்டவா்கள் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி வேதாரண்யத்தில் நடைபெற்றது. இவா்களை, அதிமுக நாகை மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஓ.எஸ். மணியன் சால்வை அணிவித்து வரவேற்றாா்.

அப்போது அவா், ‘அதிமுக ஆட்சியில் இல்லாத நேரத்திலும் மாற்றுக் கட்சியினா் இணைவது மகிழ்ச்சியளிக்கிறது. தற்போது வழங்கப்பட்ட பொங்கல் பரிசு தரம் இல்லாமல் மக்களை ஏமாற்றுவதாக உள்ளது. இதுபோன்ற காரணங்களால் அதிமுகவுக்கு புதியவா் வரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. தற்போதைய ஆட்சியால் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் கேள்விக்குறியாகியுள்ளது’ என்றாா்.

நிகழ்ச்சியில், அதிமுக நகரச் செயலாளா் எம். நமசிவாயம், நகா்மன்ற துணைத் தலைவா் சுரேஷ்பாபு, அதிமுக பிரமுகா்கள் ராஜரெத்தினம், ராஜகிளி, ஜெகநாதன், வசந்தி செல்வகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →