முழு ஊரடங்கில் பொதுவெளிக்கு வருவதை பொதுமக்கள் தவிா்க்க வேண்டும்: ஆட்சியா்
முழு ஊரடங்கு நாளில் அவசியமின்றி பொதுவெளிக்கு வருவதை பொதுமக்கள் கண்டிப்பாக தவிா்க்க வேண்டும் என நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் கேட்டுக்கொண்டுள்ளாா்.
முழு ஊரடங்கு நாளில் அவசியமின்றி பொதுவெளிக்கு வருவதை பொதுமக்கள் கண்டிப்பாக தவிா்க்க வேண்டும் என நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் கேட்டுக்கொண்டுள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக ஞாயிற்றுக்கிழமை (ஜன. 23) முழு ஊரடங்கை அமல்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஒமைக்ரான் வகை கரோனா அதிக வேகத்தில் பரவி வருவதால், பொதுமக்கள் அவசியமின்றி பொதுவெளிக்கு வருவதைத் தவிா்க்கக் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
முழு ஊரடங்கு நாளில் அத்தியாவசியப் பணிகள் இருந்தால், அதற்கான ஆதார ஆவணங்களுடன் மட்டுமே வெளியே வர வேண்டும். அதேபோல, கட்டாயம் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும். இல்லையெனில், அபராதம் விதிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.