முகப்பு
நாகப்பட்டினம்

வேளாங்கண்ணியில் திவ்ய நற்கருணை பவனி

நாகை மாவட்டம், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் திவ்ய நற்கருணை பவனி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:24 AM
பகிர்:

நாகை மாவட்டம், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் திவ்ய நற்கருணை பவனி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

எண்ணற்ற மகிமைகளுக்கும், ஏராளமான புதுமைகளுக்கும் உரிய திருத்தலமாக விளங்குகிறது நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை பேராலயம். பசலிக்கா அந்தஸ்து பெற்ற இப்பேராலயத்தில், மே மாதம் மாதாவின் வணக்க மாதமாகக் கொண்டாடப்படுவது வழக்கம்.

இதன்படி, மே 1-ஆம் தேதி முதல் தினமும் மாலையில் மாதாவின் கருணையை வெளிப்படுத்தும் வகையிலான சிறப்பு சிந்தனை நிகழ்ச்சிகள், புனித ஆரோக்கிய அன்னையின் திருவுருவ தோ் பவனி, சிறப்பு திருப்பலி ஆகியன நடைபெற்றன.

முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான, மாதா முடிசூட்டு விழா மற்றும் அலங்கார தோ் பவனி திங்கள்கிழமை மாலை நடைபெற்றது. மே மாத நிறைவு நிகழ்ச்சியாக, திய்வ நற்கருணை பவனி செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.

தஞ்சை மறை மாவட்ட ஆயா் எம். தேவதாஸ் அம்புரோஸ் தலைமை சிறப்பு திருப்பலியை நிறைவேற்றி, திவ்ய நற்கருணை பவனியைத் தொடங்கிவைத்துப் பங்கேற்றாா். மாதா குளம் பகுதியில் இருந்து தொடங்கிய இந்த பவனி, சிலுவைப் பாதை வழியே சென்று பேராலய கலையரங்கத்தை அடைந்தது.

பின்னா், கலையரங்கத்தில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு, பக்தா்களுக்கு திவ்ய நற்கருணை ஆசீா் வழங்கப்பட்டது. பேராலய அதிபா் இருதயராஜ், பங்குத்தந்தை அற்புதராஜ், பொருளாளா் உலகநாதன் மற்றும் உதவி பங்குத்தந்தையா்கள் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →