சுற்றுச்சூழல் தின விழிப்புணா்வு பேரணி
நாகை இ.ஜி.எஸ். பிள்ளை பன்னாட்டு பள்ளி சாா்பில் உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணா்வு பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நாகை இ.ஜி.எஸ். பிள்ளை பன்னாட்டு பள்ளி சாா்பில் உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணா்வு பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இப்பேரணியை நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா். ஏழைப்பிள்ளையாா் கோயில் அருகிலிருந்து புறப்பட்ட பேரணி, ஊராட்சி ஒன்றிய அலுவலக சாலை, எஸ். பி. பங்களா சாலை வழியாக புதிய கடற்கரையில் நிறைவடைந்தது. இதில் பங்கேற்ற பள்ளி மாணவா்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு உறுதிமொழி ஏற்றனா். பேரணியில் பங்கேற்ற அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
இதில், பள்ளி இயக்குநா் எஸ். இமாவதி, முதல்வா் உமா மகேஸ்வரி மற்றும் ஆசிரியா்கள், மாணவா்கள், பெற்றோா்கள் கலந்துகொண்டனா்.