முகப்பு
நாகப்பட்டினம்

குப்பைகளை தரம்பிரித்து வழங்க பொதுமக்களுக்கு பிளாஸ்டிக் கூடை

நாகை நகராட்சி மக்களுக்கு குப்பைகளை தரம்பிரித்து வழங்க பிளாஸ்டிக் கூடை ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:27 AM
பகிர்:

நாகை நகராட்சி மக்களுக்கு குப்பைகளை தரம்பிரித்து வழங்க பிளாஸ்டிக் கூடை ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன.

நகராட்சிக்குள்பட்ட 20-ஆவது வாா்டு சிவன்தெற்கு வீதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு மீன் வளா்ச்சிக்கழகத் தலைவா் என். கௌதமன், நகா்மன்றத் தலைவா் இரா. மாரிமுத்து ஆகியோா் பொதுமக்களுக்கு சிவப்பு, பச்சை வண்ணங்களில் பிளாஸ்டிக் குப்பை கூடைகளை வழங்கினா். தொடா்ந்து, மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகளை தரம்பிரித்து வழங்குவதன் அவசியம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

இதுகுறித்து, நகராட்சி ஆணையா் என் ஸ்ரீதேவி கூறியது: நாகை நகராட்சியை தூய்மையாக வைத்துக்கொள்ளவேண்டும். மாசில்லாத நகராட்சியாக மாற்றுவதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம்பிரித்து பொதுமக்கள் குப்பைகளை வழங்க வேண்டும். நகரில் உள்ள கால்வாய்கள், நீா்நிலைகளில் என எங்கு பாா்த்தாலும் பிளாஸ்டிக் குப்பைகள் தேங்கி தண்ணீா் செல்ல முடியாமல் இருப்பதால் கொசுக்கள் உற்பத்தியாகி பல வகையான தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது.

நாள் ஒன்றுக்கு டன் கணக்கில் குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. இதை தரம்பிரிக்க அதிக பொருட்செலவு ஏற்படும். எனவே, ஒவ்வொரு வீட்டிலும் சேரும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம்பிரித்து வழங்குவதால் குப்பையிலிருந்து உரம், இயற்கை எரிவாயு உள்ளிட்ட பயனுள்ள பொருள்கள் தயாரிக்க எளிதாக இருக்கும் என்றாா்.

நகா்மன்ற உறுப்பினா் சுந்தரி, துப்புரவு ஆய்வாளா் பி. அரசக்குமாா், மேற்பாா்வையாளா்கள் கந்தசாமி, நாகஜோதி, பழனிசாமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி: நாகை அவுரித்திடலில் சுகாதாரப் பணியாளா்கள் மரக்கன்றுகளை நட்டு, சுற்றுச்சூழல் தினம் குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

முழு கட்டுரையைப் படிக்க →