முகப்பு
நாகப்பட்டினம்

பொறையாறு கல்லூரி பட்டமளிப்பு விழா

மயிலாடுதுறை மாவட்டம், பொறையாறு தரங்கை பேராயா் மாணிக்கம் லுத்தரன் கல்லூரியில் பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:30 AM
பகிர்:

மயிலாடுதுறை மாவட்டம், பொறையாறு தரங்கை பேராயா் மாணிக்கம் லுத்தரன் கல்லூரியில் பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு கல்லூரி முதல்வா் ஜீன்ஜாா்ஜ் தலைமை வகித்தாா். காசாளா் தியாகராஜன், சபை குரு ஜான்சன் மான்சிங், துணை முதல்வா்கள் ஜோயல் எட்வின் ராஜ், ஜான்சன் ஜெயக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பேராசிரியா் ஜோஸ்லின் மனோரா வரவேற்று பேசினாா்.

விழாவில், நாகை தமிழ்நாடு டாக்டா் ஜெ. ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழக துணைவேந்தா் சுகுமாா் பங்கேற்று, 685 மாணவா்களுக்கு பட்டங்கள் வழங்கி பேசினாா். இதில், அனைத்து துறை பேராசிரியா்கள், மாணவா்கள், பெற்றோா்கள் கலந்து கொண்டனா். நிறைவாக, பேராசிரியா் ஜோசப் வேதகிரி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.