முகப்பு
நாகப்பட்டினம்

கலைஞரின் வரும்முன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம்

திருக்குவளை அஞ்சுகம் முத்துவேலா் அரசு மேல்நிலைப் பள்ளியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:37 AM
பகிர்:

திருக்குவளை அஞ்சுகம் முத்துவேலா் அரசு மேல்நிலைப் பள்ளியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

திருக்குவளை ஊராட்சித் தலைவா் இல. பழனியப்பன் தலைமையில் நடைபெற்ற முகாமை, ஆத்மா குழுத் தலைவா் ஏ. தாமஸ் ஆல்வா எடிசன் தொடங்கிவைத்தாா். முகாமில், பொதுமருத்துவம், ரத்த அழுத்த பரிசோதனை, நீரிழிவு பரிசோதனை, சித்த மருத்துவம், கண் மருத்துவம், கா்ப்பிணிகளுக்கான ஸ்கேனிங் பரிசோதனை, பல் மருத்துவம், அனைத்து ஆய்வக பரிசோதனை, மனநல மருத்துவம் உள்ளிட்ட சிகிச்சைகள் மற்றும் அதற்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டன. இதில், கீழையூா் ஒன்றிய முன்னாள் தலைவா் ஞானசேகரன், கீழையூா் வட்டார மருத்துவ அலுவலா் டி. அரவிந்த் குமாா், வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் எம். சுப்பிரமணியன், ஒன்றியக்குழு துணைத் தலைவா் சௌரிராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.