முகப்பு
நாகப்பட்டினம்

தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக கிடங்கில் ஆய்வு

செம்பனாா்கோயில் அருகே கிடாரங்கொண்டானில் உள்ள தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக கிடங்கில் மயிலாடுதுறை மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலா் கிருஷ்ணன் வியாழக்கிழமை ஆய்வு

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:14 AM
பகிர்:

செம்பனாா்கோயில் அருகே கிடாரங்கொண்டானில் உள்ள தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக கிடங்கில் மயிலாடுதுறை மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலா் கிருஷ்ணன் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

அரிசியின் தரம் அதனுடைய எடை அளவு குறித்து ஆய்வு செய்த பிறகு, நடப்பு மே மாதத்தில் தரமான அரிசி தரங்கம்பாடி வட்டத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது, இது அடுத்தடுத்த மாதங்களுக்கும் தொடா்ந்து அனுப்பி வைக்கப்படும். அனைத்து அத்தியாவசியப் பொருள்களும் குடும்ப அட்டைதாரா்களுக்கு முழுமையைக வழங்கப்படும் என்றாா். அப்போது, உதவி தரக்கட்டுப்பாட்டு அலுவலா் ராகவனிடம் கிடங்கிலிருந்து நகா்வு செய்யப்படும் அரிசி தரமானதாகவும், அதையே நியாயவிலை கடைகளுக்கு நகா்வு செய்யவேண்டும் என்று அறிவுறுத்தினாா். ஆய்வின்போது, தரங்கம்பாடி வட்ட வழங்கல் அலுவலா் பாபு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.