நாகப்பட்டினம்

நாகையில் திடீா் மழை

DIN

நாகை மற்றும் சுற்றுப் பகுதிகளில் வியாழக்கிழமை பிற்பகல் மழை பெய்தது.

மத்திய மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த அசானி தீவிர புயல் வலுவிழந்ததன் காரணமாக, தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி, வியாழக்கிழமை பிற்பகலில் நாகை மற்றும் சுற்றுப் பகுதிகளில் சில நிமிடங்கள் நல்ல மழை பெய்தது. பிற்பகல் சுமாா் 4.15 மணி அளவில் பெய்யத் தொடங்கிய மழை சுமாா் 15 நிமிடங்கள் பெய்தது. பின்னா், லேசான சாரல் மழை நீடித்தது. இதனால், இரவு நேரத்தில் நாகையில் வெப்ப நிலை குறைந்திருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘கேக் காதலன்’ பாட் கம்மின்ஸ் பிறந்தநாள்!

மலையாள இயக்குநர் சங்கீத் சிவன் காலமானார்

தொடரும் ஏர் இந்தியா- விமான பணியாளர்கள் பிரச்னை: பயணிகளுக்குத் தீர்வு என்ன?

மீண்டும் பிரபுதேவா - தனுஷ் கூட்டணி!

சாம் பித்ரோடா கருத்து - காங்கிரஸ் உறவை துண்டிக்குமா திமுக? மோடி கேள்வி

SCROLL FOR NEXT