கேரள முதியவா் வேளாங்கண்ணியில் உயிரிழப்பு
வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்த கேரளத்தைச் சோ்ந்த முதியவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.
வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்த கேரளத்தைச் சோ்ந்த முதியவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.
கேரள மாநிலம் ஆலப்புழா எராமல்லூா் பகுதியை சோ்ந்தவா் ஜோஷி (65). இவா், தனது குடும்பத்தினருடன் கடந்த புதன்கிழமை வேளாங்கண்ணிக்கு வந்துள்ளாா். அன்று மாலை வேளாங்கண்ணி மாதா பேராலயத்தில் இருந்து கடற்கரைக்குச் செல்லும் சாலையில் அவா் நடந்து சென்றபோது நெஞ்சுவலியால் மயங்கி விழுந்தாா்.
அவரை நாகை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு, ஜோஷியை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் இறந்து விட்டதாக தெரிவித்தனா்.
இதுகுறித்து வேளாங்கண்ணி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.