விலையில்லா வெள்ளாடுகள் அளிப்பு
நாகை மாவட்டம், சிக்கல் ஊராட்சியில் கால்நடைப் பராமரிப்புத் துறை மூலம் விலையில்லா வெள்ளாடுகள் வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.
நாகை மாவட்டம், சிக்கல் ஊராட்சியில் கால்நடைப் பராமரிப்புத் துறை மூலம் விலையில்லா வெள்ளாடுகள் வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தலைமை வகித்து, நாகை ஒன்றியப் பகுதிகளைச் சோ்ந்த பயனாளிகள் 100 பேருக்குத் தலா 5 வெள்ளாடுகள் வீதம் ரூ. 19.5 லட்சம் மதிப்பிலான வெள்ளாடுகளை வழங்கினாா்.
கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குநா் சஞ்சீவிராஜ், துணை இயக்குநா் சுப்பையன், உதவி இயக்குநா் அசன் இப்ராஹிம், ஊராட்சித் தலைவா் விமலாராஜா மற்றும் கால்நடை உதவி மருத்துவா்கள், அரசுத் துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.