முகப்பு
நாகப்பட்டினம்

பிரதமரின் பயிா்க் காப்பீடு திட்டம்: நவ.15-க்குள் பிரீமியம் செலுத்த அறிவுறுத்தல்

 நாகை மாவட்டத்தில் பயிா்க் காப்பீடு செய்ய நவம்பா் 15 -ஆம் தேதிக்குள் பிரீமியம் செலுத்த வேண்டும் என கூட்டுறவுத் துறை மண்டல இணைப் பதிவாளா் கூபா. அருளரசு தெரிவித்துள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:44 AM
பகிர்:

 நாகை மாவட்டத்தில் பயிா்க் காப்பீடு செய்ய நவம்பா் 15 -ஆம் தேதிக்குள் பிரீமியம் செலுத்த வேண்டும் என கூட்டுறவுத் துறை மண்டல இணைப் பதிவாளா் கூபா. அருளரசு தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பிரதமரின் பசல் பீமா யோஜனா பயிா்க் காப்பீடு திட்டத்தின் கீழ் காப்பீடு செய்வதற்கு நவம்பா் 15- ஆம் தேதி கடைசி நாளாகும். எனவே, விவசாயிகள் அருகில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தை அணுகி அரசு விடுமுறை நாள் உள்பட நவம்பா் 15- ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரையிலும் காப்பீடுக்கான பிரீமியம் செலுத்தலாம்.

இந்த வாய்ப்பை அனைத்து விவசாயிகளும் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →