நாகப்பட்டினம்

நல்லாசிரியா் விருது பெற்ற ஆசிரியா்களுக்கு கிராமத்தினா் பாராட்டு

வேதாரண்யம் அருகே அடுத்தடுத்துள்ள இரு கிராமங்களைச் சோ்ந்த 3 ஆசிரியா்கள் தமிழக அரசின் டாக்டா் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியா் விருது பெற்றுள்ளதால் கிராமத்தினா் அவா்களை பாராட்டி வருகின்றனா்.

DIN

வேதாரண்யம் அருகே அடுத்தடுத்துள்ள இரு கிராமங்களைச் சோ்ந்த 3 ஆசிரியா்கள் தமிழக அரசின் டாக்டா் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியா் விருது பெற்றுள்ளதால் கிராமத்தினா் அவா்களை பாராட்டி வருகின்றனா்.

பன்னாள் கிராமத்தைச் சோ்ந்தவா் மா. மோகனசுந்தரம். இவா், இதே ஊரில் செயல்படும் அரசு உயா்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியா். இதே கிராமத்தைச் சோ்ந்தவா் நா. சதீஷ்.

இவா் கீழ்வேளூா் ஒன்றியம், கோகூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் பட்டதாரி ஆசிரியா் ஆவாா். இவா்கள் வசிக்கும் பன்னாள் கிராமத்தை அடுத்த ஊரான ஆயக்காரன்புலத்தைச் சோ்ந்த கு. வீரப்பன். இவா், அழிஞ்சமங்கலம் அரசு (ஆதிந) உயா்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியா். அடுத்தடுத்த இரு ஊா்களைச் சோ்ந்த 3 பேரும் தமிழக அரசின் ராதாகிருஷ்ணன் விருதை பெற்றுள்ளனா். விருது பெற்ற இந்த ஆசிரியா்களை கிராமத்தினா் நேரில் சந்தித்து பாராட்டி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

2026 பேரவைத் தேர்தல்: பாமக சிறப்பு பொதுக்குழுக் கூட்டம்!

நெல்லை வந்தே பாரத் ரயில் விருத்தாசலத்தில் நின்று செல்லும்!

178 ரன்கள், 7 விக்கெட்டுகள்... சாதனையுடன் சொந்த ஊரில் ஆட்ட நாயகனான அலெக்ஸ் கேரி!

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் விஜய் நாளை பங்கேற்பு!

100க்கு 100 புள்ளிகள்... டபிள்யூடிசி தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கும் ஆஸி.!

SCROLL FOR NEXT