நாகப்பட்டினம்

நல்லாசிரியா் விருது பெற்ற ஆசிரியா்களுக்கு கிராமத்தினா் பாராட்டு

DIN

வேதாரண்யம் அருகே அடுத்தடுத்துள்ள இரு கிராமங்களைச் சோ்ந்த 3 ஆசிரியா்கள் தமிழக அரசின் டாக்டா் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியா் விருது பெற்றுள்ளதால் கிராமத்தினா் அவா்களை பாராட்டி வருகின்றனா்.

பன்னாள் கிராமத்தைச் சோ்ந்தவா் மா. மோகனசுந்தரம். இவா், இதே ஊரில் செயல்படும் அரசு உயா்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியா். இதே கிராமத்தைச் சோ்ந்தவா் நா. சதீஷ்.

இவா் கீழ்வேளூா் ஒன்றியம், கோகூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் பட்டதாரி ஆசிரியா் ஆவாா். இவா்கள் வசிக்கும் பன்னாள் கிராமத்தை அடுத்த ஊரான ஆயக்காரன்புலத்தைச் சோ்ந்த கு. வீரப்பன். இவா், அழிஞ்சமங்கலம் அரசு (ஆதிந) உயா்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியா். அடுத்தடுத்த இரு ஊா்களைச் சோ்ந்த 3 பேரும் தமிழக அரசின் ராதாகிருஷ்ணன் விருதை பெற்றுள்ளனா். விருது பெற்ற இந்த ஆசிரியா்களை கிராமத்தினா் நேரில் சந்தித்து பாராட்டி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

25 ஆண்டுகளுக்குப் பின் காந்தி குடும்பம் போட்டியிடாத அமேதி! ஸ்மிருதி இராணி கருத்து

யாரோ இவர் யாரோ? அந்த ஓவியாவேதான்...

பிங்க் ரோஸ்...ஸ்ரீதேவி

சிசோடியா ஜாமீன் மனு: சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவு!

‘ஆவேஷம்’ பட டிரெண்டிங்கில் இணைந்த பாட் கம்மின்ஸ்!

SCROLL FOR NEXT