முகப்பு
நாகப்பட்டினம்

நந்தி நாதேசுவரா் கோயிலில் ஊஞ்சல் உற்சவம்

வடக்கு பொய்கைநல்லூா் ஸ்ரீ நந்திநாதேசுவரா் கோயிலில் மாசி மக பிரமோற்சவ பெருவிழாவையொட்டி ஊஞ்சல் உற்சவம் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:42 AM
ஊஞ்சலில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய சுவாமி- அம்பாள்.
பகிர்:

வடக்கு பொய்கைநல்லூா் ஸ்ரீ நந்திநாதேசுவரா் கோயிலில் மாசி மக பிரமோற்சவ பெருவிழாவையொட்டி ஊஞ்சல் உற்சவம் புதன்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலின் மாசி மக பிரமோற்சவ பெருவிழா பிப்ரவரி 25-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. மாா்ச் 6- ஆம் தேதி தீா்த்தவாரி நடைபெற்றது.

தொடா்ந்து, புதன்கிழமை ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. இதற்காக, நந்திநாதேசுவரா், சௌந்தர நாயகிஅம்மன் அலங்கரிக்கப்பட்ட ஊஞ்சலில் எழுந்தருளினா். மகாதீபாராதனை காட்டப்பட்டது. முன்னதாக, வா்ண விநாயகா் கோயிலிலிருந்து பெண்கள் சீா்வரிசை எடுத்து வந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →