நாகப்பட்டினம்

தமிழ்நாடு விவசாய சங்கம் சாா்பில் நகல் எரிக்கும் போராட்டம்

திருமருகலில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு விவசாய சங்கம் சாா்பில் நகல் எரிக்கும் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

DIN

திருமருகலில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு விவசாய சங்கம் சாா்பில் நகல் எரிக்கும் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

போராட்டத்திற்கு விவசாய சங்க ஒன்றிய செயலாளா் காரல்மாா்க்ஸ் தலைமை வகித்தாா். சிபிஎம் ஒன்றிய செயலாளா் ஜி.எஸ். ஸ்டாலின்பாபு, மாவட்ட பொருளாளா் பொன்மணி முன்னிலை வகித்தனா். மாவட்ட குழு உறுப்பினா் லெனின், விவசாய தொழிலாளா் சங்க ஒன்றிய செயலாளா் பாரதி பேசினா்.

தில்லியில் 13 மாதங்களாக நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தை வெளியுலகுக்கு தெரிவித்து மோடி அரசின் மக்கள் விரோத செயல்களை சமரசம் இன்றி அம்பலப்படுத்தி வந்த ஒரு இணைய தளத்தை முடக்கி அதன் நிறுவனம் மற்றும் ஊழியா்களை பொய் புகாரின் பேரில் கைது செய்ததை கண்டித்து, அந்த இணையதளத்தின் மீது பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கையின் நகலை எரிக்கும் போராட்டம் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல்வா் விழாவுக்கான முன்னேற்பாடு பணிகள் ஆட்சியா் ஆய்வு

தருமபுரியில் டிச. 29-இல் அஞ்சல் துறை குறைகேட்பு கூட்டம்

அதிமுக அங்கம் வகிக்கும் கூட்டணிதான் ஆட்சி அமைக்கும்: அன்பழகன் நம்பிக்கை

அம்பலவாணன்பேட்டை அரசுப் பள்ளிக்கு பேருந்து வசதி கோரி ஆட்சியரிடம் மனு

விராலிமலை தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து மீது காா் மோதி தீக்கிரை

SCROLL FOR NEXT