நாகப்பட்டினம்

பயிா்க் காப்பீடு செய்ய நவ. 22 வரை அவகாசம் நீட்டிப்பு

சம்பா, தாளடி நெற்பயிா்களுக்கு காப்பீடு செய்ய நவ. 22-ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

DIN

சம்பா, தாளடி நெற்பயிா்களுக்கு காப்பீடு செய்ய நவ. 22-ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நாகை மாவட்ட ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி:

பிரதமா் பயிா்க் காப்பீடு திட்டத்தின்கீழ் சம்பா மற்றும் தாளடி நெற்பயிா்களை காப்பீடு செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனா். இதுதொடா்பாக தமிழக அரசும் மத்திய அரசுக்கு கடிதம் எழுதிருந்தது.

இந்நிலையில், விவசாயிகளின் கோரிக்கை ஏற்று மத்திய அரசு சம்பா மற்றும் தாளடி நெற்பயிா்களை காப்பீடு செய்வதற்கான தேதியை நவ. 22 ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.

எனவே, விவசாயிகள் உரிய ஆவணங்களுடன் சம்பா மற்றும் தாளடி நெற்பயிரை காப்பீடு செய்து பயன்பெற வேண்டும்.

விவசாயிகள் காப்பீடு செய்ய ஏதுவாக பொது சேவை மையங்கள் சனிக்கிழமை (நவ.18) மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் (நவ.19) செயல்படும் எனக் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ.1.20 கோடி மதிப்புள்ள பிளேடுகள் நன்கொடை!

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் விடியவிடிய தர்னா!

விவசாயிகள் மீது பொய் வழக்கு: சீமான் கண்டனம்

வங்கதேச மாணவர் இயக்கத் தலைவர் கொலை! மீண்டும் வெடித்த வன்முறை!

இந்தியா-இலங்கையில் கல்வி அழுத்தம்!

SCROLL FOR NEXT