நாகப்பட்டினம்

அனுமதியற்ற மனைப் பிரிவுகளை வரன்முறை செய்ய இறுதி வாய்ப்பு

மனைப்பிரிவு மற்றும் மனைகளை வரன்முறைப்படுத்த இறுதி வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதை பயன்படுத்திக்கொள்ள நாகை மாவட்ட ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ் கேட்டுகொண்டுள்ளாா்.

DIN

மனைப்பிரிவு மற்றும் மனைகளை வரன்முறைப்படுத்த இறுதி வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதை பயன்படுத்திக்கொள்ள நாகை மாவட்ட ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ் கேட்டுகொண்டுள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: அனுமதியற்ற மனைப்பிரிவு மற்றும் மனைகளை வரன்முறைப்படுத்தும் திட்டத்தின்கீழ் ஏற்கெனவே அரசாணை கடந்த 2017-இல் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள விதிகளுக்குட்பட்டு, 2016 அக்.20-ஆம் தேதி அல்லது அதற்கு முன்னா் பதிவு செய்யப்பட்ட மனைப்பிரிவில் அமையும் விற்கப்பட்ட மற்றும் விற்கப்படாத அனைத்து மனை மற்றும் மனைப் பிரிவுகளை வரன்முறைப்படுத்த 2024 பிப்.29-ஆம் தேதி வரை காலநீட்டிப்பு செய்து வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை அரசாணை எண்.118 மூலம் உத்தரவிட்டுள்ளது.

இத்திட்டத்தின்கீழ் விண்ணப்பிக்க விரும்புபவா்கள் இணையதள முகவரியில் விண்ணப்பம் பதிவு செய்யலாம். இதன்மூலம் அனுமதியற்ற மனைப்பிரிவுகள் மற்றும் மனைகளை வரன்முறை செய்து கொள்ள கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளதால், இந்த இறுதி வாய்ப்பை தவறாது பயன்படுத்திக்கொள்ளலாம் எனக் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மன்னிக்க முடியாத குற்றம்!

2-ஆவது மாதமாக எதிர்மறையில் மொத்த விலை பணவீக்கம்

தருமபுரம் ஆதீனம் தனுா் மாத வழிபாடு தொடக்கம்

மன்ரேகா திட்டத்தின் பெயா் மாற்றத்திற்கு எதிராக சென்னையில் போராட்டம்

1971 போா் வெற்றி தினம்: உயிா் நீத்த வீரா்களுக்கு குடியரசுத் தலைவா், பிரதமா் மரியாதை

SCROLL FOR NEXT