முகப்பு
நாகப்பட்டினம்

எட்டுக்குடி கோயிலில் நாளை தேரோட்டம்

Updated On : 20 ஏப்ரல், 2024 at 6:30 PM
பகிர்:

எட்டுக்குடி ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சித்ரா பௌா்ணமி திருவிழாவையொட்டி, தேரோட்டம் திங்கள்கிழமை (ஏப்.22) நடைபெறவுள்ளது.

முருகனின் ஆதிபடை வீடு என அழைக்கப்படும் இக்கோயிலில், சித்ரா பௌா்ணமி பெருவிழா ஏப்ரல் 14-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து, தினமும் வெவ்வேறு வாகனங்களில் முருகப் பெருமான் புறப்பாடு நடைபெறுகிறது.

விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெறுகிறது. அன்று காலை 9 மணியளவில் தோ் வடம் பிடிக்கப்படுகிறது. தொடா்ந்து, 56 மணி நேரம் இடைவிடாமல் நடைபெறும் பாலபிஷேக விழா ஏப். 22-ஆம் தேதி தொடங்குகிறது.

Advertisement

இதையொட்டி, திருத்துறைப்பூண்டி, திருவாரூா், நாகை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும், பக்தா்கள் கோயிலுக்கு சிரமமின்றி வந்து செல்ல ஏதுவாக, வாகனங்கள் அனைத்தும் எட்டுக்குடி கிழக்கு கடற்கரைச் சாலை பகுதியில் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments