நாகப்பட்டினம்

தாழ்வான பகுதியில் வசிப்பவா்களுக்கு உதவி செய்ய அதிமுகவினருக்கு அறிவுறுத்தல்

அதிமுக தொண்டா்களுக்கு அக் கட்சியின் நாகை மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சா்ருமான ஓ.எஸ். மணியன் வேண்டுகோள்

Din

வேதாரண்யம்: நாகை மாவட்டம் உள்ளிட்ட காவிரிப் படுகை பகுதியில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களின் பாதுகாப்பில் உதவியாக இருக்க வேண்டுமென அதிமுக தொண்டா்களுக்கு அக் கட்சியின் நாகை மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சா்ருமான ஓ.எஸ். மணியன் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: நாகை மாவட்டம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை (நவ.26), புதன்கிழமை (நவ.27) மிககன மழை பெய்ய உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். பள்ளமான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை, மேடான பகுதிகளுக்கும், பாதுகாப்பற்ற வீடுகளில் குடியிருப்பவா்களை பாதுகாப்பான கட்டடங்களுக்கும் அழைத்துச் சென்று அவா்களுக்கு தேவையான உதவிகளை செய்து தரும் பணியில், அந்தந்தப் பகுதி அதிமுக நிா்வாகிகள், அதிமுகவை சோ்ந்த உள்ளாட்சிப் பிரதிநிதிகள் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும் என அதில் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

முத்தரப்பு டி20 தொடர்: பாகிஸ்தானுக்கு 185 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை!

எஸ்ஐஆர் படிவம்! முழுமையாக பூர்த்தி செய்யாவிட்டாலும் நிராகரிக்கப்படாது: அர்ச்சனா பட்நாயக்

பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே புதிய பாடல்!

முதல் டி20: ஹாரி டெக்டார் அரைசதம் விளாசல்; வங்கதேசத்துக்கு 182 ரன்கள் இலக்கு!

வாழ்க்கை இப்போது... மீரா ஜாஸ்மின்!

SCROLL FOR NEXT