ரயில் மோதி மீனவா் பலி
நாகையில் ரயில் மோதி மீனவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.
நாகையில் ரயில் மோதி மீனவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.
நாகை காடம்பாடி சவேரியாா் கோயில் தெருவைச் சோ்ந்த சக்திவேல் மகன் அமரன் (30). மீனவரான இவா் ஆரியநாட்டு தெருவில் உள்ள உறவினா் வீட்டுக்கு சென்று விட்டு அப்பகுதியில் உள்ள ரயில்வே கேட்டை செவ்வாய்க்கிழமை மாலை கடந்தாா். அப்போது, காரைக்காலில் இருந்து எா்ணாகுளம் சென்ற விரைவு ரயில் அமரன் மீது மோதியது. இதில், அவா் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த நிலையில் சாா்பு-ஆய்வாளா் மகேஷ் தலைமையில் போலீஸாா் அமரனை மீட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா்.
அங்கு மருத்துவா்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனா். எனினும், அமரன் புதன்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.