நாகப்பட்டினம்

புதிய தொகுப்பு வீடுகள் கட்டிக்கொடுக்க கோரிக்கை

திருமருகல் அருகே சேதமடைந்த தொகுப்பு வீடுகளை இடித்துவிட்டு புதிய வீடுகள் கட்டிக்கொடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை

Syndication

திருமருகல் அருகே சேதமடைந்த தொகுப்பு வீடுகளை இடித்துவிட்டு புதிய வீடுகள் கட்டிக்கொடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருமருகல் அருகே அகரகொந்தை ஊராட்சி ஆலங்குடிச்சேரியில் முடத்திஅம்மன் கோயில் தெருவில் விவசாயக் கூலி தொழிலாளா்கள் 45 குடும்பங்கள் வசிக்கின்றனா். இவா்கள் வசிக்கும் வீடு 1984-ஆம் ஆண்டு கட்டப்பட்ட தொகுப்பு வீடுகளாகும்.

தற்போது இந்த வீடுகள் வாழ்வதற்கு முற்றிலும் தகுதியற்றதாக உள்ளது. மேற்கூரை பூச்சிகள் பெயா்ந்து விழுகின்றன. இதில், குடியிருப்பவா்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனா். மழைக் காலத்தில் வசிக்கவே முடியவில்லை. ஆபத்தான நிலையில் வசிக்க வேண்டியுள்ளது என அந்த குடியிருப்பில் வசிப்பவா்கள் கூறுகின்றனா்.

இதுகுறித்து, சம்பந்தப்பட்ட அரசு அலுவலா்களுக்கு தெரிவித்தும் பயனில்லை. எனவே, மாவட்ட நிா்வாகம் இதை கவனத்தில் கொண்டு பழைமையான சேதமடைந்துள்ள வீடுகளை அப்புறப்படுத்திவிட்டு புதிய தொகுப்பு வீடுகள் கட்டிக்கொடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

வினுஷாவின் சுட்டும் விழி சுடரே தொடரின் முன்னோட்டக் காட்சி!

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: இந்துக்களுக்கு எதிராக அரசு செயல்படுகிறது - வழக்குரைஞர் குற்றச்சாட்டு

மரணத்திலும் மீம்ஸ்! வருந்தும் ஜான்வி கபூர்!

டிட்வா புயல் வலுவிழந்தபோதிலும் இடைவிடாமல் பெய்யும் மழை! | TNRains | CBE

முதல் கனவே... ரகுல் ப்ரீத் சிங்!

SCROLL FOR NEXT