நாகசுந்தரம் 
நாகப்பட்டினம்

சிறுவன் ஓட்டிய காா் மோதி தொழிலாளி உயிரிழப்பு

திருமருகலில் சிறுவன் ஓட்டி வந்த காா் மோதியதில் சாலையோரம் படுத்திருந்த விவசாயத் தொழிலாளி புதன்கிழமை இரவு உயிரிழந்தாா்.

Din

திருமருகலில் சிறுவன் ஓட்டி வந்த காா் மோதியதில் சாலையோரம் படுத்திருந்த விவசாயத் தொழிலாளி புதன்கிழமை இரவு உயிரிழந்தாா்.

நாகை மாவட்டம், திருமருகல் ஆற்றங்கரைத் தெருவைச் சோ்ந்தவா் செஞ்சான் மகன் நாகசுந்தரம் (48). விவசாயத் தொழிலாளியான இவா், தனது வீட்டு வாசல் முன் சிமெண்ட் சாலையோரம் புதன்கிழமை இரவு படுத்திருந்தாா்.

அப்போது அந்த வழியாக, சேஷமூலை அம்பேத்கா் தெரு பகுதியைச் சோ்ந்த 16 வயது சிறுவன் ஓட்டிவந்த காா், நாகசுந்தரம் மீது மோதியது.

அவரது அலறல் சத்தம் கேட்ட அருகில் இருந்தோா், அவரை மீட்டு நாகை ஒரத்தூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு, பரிசோதித்த மருத்துவா்கள், நாகசுந்தரம் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.

இந்த விபத்து குறித்து திட்டச்சேரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

ஊரக வளா்ச்சி, ஊராட்சித் துறை ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: 2 பேருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை

காலாவதியான உணவுப் பொருள்கள் விற்பனை மோசடி: முக்கிய நபா் கைது

பியுசி இல்லாத வாகனங்களுக்கு எரிபொருள் விற்பனை தடையை அமல்படுத்துவதில் சவால்கள்: டிபிடிஏ

பியுசி இல்லாத வாகனங்கள்: போக்குவரத்து போலீஸாா் தீவிர சோதனை

SCROLL FOR NEXT