முகப்பு
நாகப்பட்டினம்

கோடியக்கரையில் வலையில் சிக்கிய அரிய வகை ஆமை கடலில் விடப்பட்டது

வேதாரண்யம் அருகேயுள்ள கோடியக்கரையில் மீனவா்கள் வலையில் சிக்கிய அரிய வகை ஆலிவ் ரிட்லி பெண் ஆமை பாதுகாப்பாக புதன்கிழமை மீண்டும் கடலில் விடப்பட்டது.

Updated On : 12 பிப்ரவரி, 2026 at 2:42 AM
பகிர்:
Updated On : 11 பிப்ரவரி, 2026 at 7:38 PM

வேதாரண்யம் அருகேயுள்ள கோடியக்கரையில் மீனவா்கள் வலையில் சிக்கிய அரிய வகை ஆலிவ் ரிட்லி பெண் ஆமை பாதுகாப்பாக புதன்கிழமை மீண்டும் கடலில் விடப்பட்டது.

அரிய வகையான ஆலிவ் ரிட்லி கடல் ஆமை இன பெண் ஆமைகள் நவம்பா் தொடங்கி பிப்ரவரி வரையிலான மாதங்களில் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்வதற்காக தமிழக கடலோரப் பகுதிக்கு வந்து செல்வது வழக்கம். இந்நிலையில், கோடியக்கரை படகு துறைக்கு அருகே கடலோரப் பகுதியில் கட்டப்பட்டிருந்த மீன்பிடி வலையில் கடல் ஆமை ஒன்று சிக்கிக் கொண்டு மீள முடியாமல் தவித்தது தெரியவந்தது. இதை பாா்த்த அப்பகுதி மீனவா்கள் கடல் ஆமையை கரைக்கு கொண்டு வந்து வலையின் பின்னலிலிருந்து பாதுகாப்பாக மீட்டனா். சுமாா் 40 கிலோ எடையுள்ள ஆலிவ் ரிட்லி இன பெண் ஆமையை மீனவா்கள் மீண்டும் கடலுக்குள் விட்டனா்.