வேதாரண்யம் பகுதியில் தொடர் மழையால் வேளாண் பயிர்கள் பாதிக்கும் அபாயம்... 
நாகப்பட்டினம்

வேதாரண்யம் பகுதியில் தொடர் மழை! வேளாண் பயிர்கள் பாதிக்கும் அபாயம்!

வேதாரண்யம் பகுதியில் தொடர் மழை பெய்து வருவதால் ஏற்படக் கூடிய பாதிப்புகள் குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 83.6 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடந்த சில நாள்களாக கடலோரப் பகுதியில் மழைப்பொழிவு நீடித்து வருகிறது.

இதனைத் தொடர்ந்து, பரவலான மழை அவ்வப்போது பெய்து வந்த நிலையில், செவ்வாய்க்கிழமை (ஜன. 13) காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் வேதாரண்யம் - 83.6 மி. மீ, தலைஞாயிறு -72.6 மி. மீ, கோடியக்கரை -50.4 மி. மீட்டர் அளவுகளிலான மழைப் பொழிவு பதிவாகியுள்ளது.

இந்த நிலையில், தொடர்ந்து மழை நீடித்து வருவதால் சம்பா பருவ நெற்கதிர்கள் சாய்ந்து பாதிப்பை ஏற்படுத்தும் சூழல் உருவாகியுள்ளது. இதேபோல மழை தொடர்ந்தால் நிலக்கடலை உள்ளிட்ட வேளாண் பயிர்கள் பாதிப்படையக்கூடும் என அஞ்சப்படுகிறது.

இத்துடன், கடல் சீற்றமாக காணப்படுவதால் பெரும்பாலான மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

With continuous rainfall in the Vedaranyam area of ​​Nagapattinam district, 83.6 millimeters of rain have been recorded in the last 24 hours.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பராசக்தி வெற்றியைக் கொண்டாடிய படக்குழு!

ஆம்புலன்ஸ் - கார் மோதி விபத்து! 4 பேர் காயம்!

தமிழ் கலாசாரத்தின் மீதான தாக்குதல்! ஜன நாயகனுக்காக ராகுல்!

சென்னை சங்கமம் - 2026 : முதல்வர் ஸ்டாலின் நாளை தொடக்கி வைக்கிறார்!

பொங்கல் பரிசுத் தொகுப்பு நாளையும் வழங்கப்படும்!

SCROLL FOR NEXT