முகப்பு
நாகப்பட்டினம்

அச்சம் தீா்த்த விநாயகா் கோயில் குடமுழுக்கு

வேதாரண்யத்தில் அச்சம் தீா்த்த விநாயகா் கோயில் குடமுழுக்கு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 மே, 2026 at 6:24 AM
வேதாரண்யத்தில் அச்சம் தீா்த்த விநாயகா் கோயில் குடமுழுக்கு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
பகிர்:

வேதாரண்யத்தில் அச்சம் தீா்த்த விநாயகா் கோயில் குடமுழுக்கு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

வேதாரண்யம் வேதாரண்யேசுவரா் கோயில் நிா்வாகத்துக்குள்பட்ட வடக்கு வட போக்கி வீதியான செங்காதலை சாலைப் பகுதியில் அமைந்துள்ளது அச்சம் தீா்த்த விநாயகா் கோயில். இந்தக் கோயிலின் திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு யாகசாலை பூசைகள் செவ்வாய்க்கிழமை தொடங்கின. வியாழக்கிழமை குடமுழுக்கு விழா நடைபெற்றது.

விழாவில், வேதாரண்யேசுவரா் கோயில் செயல் அலுவலா், வரணி ஆதீனம் செவ்வந்திநாத பண்டார சன்னதி, குருகுலம் அறங்காவலா் வேதரத்னம், ஜி.கே. அறக்கட்டளை நிா்வாகிகள் காா்த்திகேயன், பாலச்சந்திரன் உள்பட திரளான மக்கள் பங்கேற்றனா்.

Advertisement