வழக்குரைஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு
திருவாரூரில் வழக்குரைஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் வியாழக்கிழமை ஈடுபட்டனர்.
திருவாரூரில் வழக்குரைஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் வியாழக்கிழமை ஈடுபட்டனர்.
சிவகங்கையில் வழக்குரைஞர்கள் மீது பொய் வழக்குப் பதிந்திருப்பதாகவும், இதைக் கண்டித்து திருவாரூரில் மாவட்ட வழக்குரைஞர்கள் சங்கம் சார்பில் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு சங்கத் தலைவர் மணிவண்ணன் தலைமை வகித்தார். செயலர் ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.